நாம் தமிழர்கள்

நம் முன்னோர்
நமக்கு விட்டுச்சென்ற
நாகரிகம் இழந்தோம்...
சில நடிகனுக்காக!

வீதி வந்து
மானம் விலைப்பேசி
மோசம் போனோம்...
பல அரசியல்வாதிகளிடம்!

தன்மானம்
தடுமாறி விழ...
சுயநலம்
எட்டிப்பார்த்து
எள்ளி நகையாட...
பணபலம்
பாசத்தை பந்தாட...
நமது ஒற்றுமைகள்
சுற்றுலா சென்று விட...
கெளரவங்கள்
நடுத்தெருவில் கூத்தாட...
சட்டங்கள் சற்றே
களைப்பாற...
உரிமைகள்
ஒருபுறம் உறங்கிக்கிடக்க...
--- மரியாதை
மடிந்தே போய்விட்டது!

இன்னும்
இழப்பதற்கு
தத்தளிக்கும் உணர்வுகள்..
தவிக்கும் உயிர்கள்..
துடிக்கும் இ்னம்..
மட்டும் மிஞ்சியுள்ளது!

இதையும்
இழந்துவிட்டு..
நமக்கு நாமே
அடையாளம் தொலைத்து..
பெருமைப் பேசி திரிவோம்!

எழுதியவர் : (4-May-17, 9:01 am)
Tanglish : naam tamizharkal
பார்வை : 280

மேலே