மனசெல்லாம் 14

{ இதுவரை - ஷமீர் சித்தார்த்திடம் அடி வாங்கி இருப்பானோ என்ற கலக்கத்தில் ராதிகா ...பள்ளியில் ஷமீர் பதில் அளிக்காது ராதிகாவை பார்த்தபடி அமைதியில் ...}
ராதிகா - ஷமீர் சொல்லு என்ன ஆச்சு நான் சித்தார்த்தை பார்த்தேன் நேற்று அவன் உள்ளே வந்தானே நீயும் இங்கு இருந்தாய் என்ன ஆச்சு ...???
ஷமீர் - அக்கா பயப்படாதீங்க ஒன்னும் ஆகல சும்மா என்ன மிரட்டுனாங்க அவ்ளோதான் ...
ராதிகா - இனி நீ என் கூட வருவேனா நானே பார்த்துக்கொள்கிறேன் ...சரி போயிட்டு வரன்...
( ராதிகா சிறு பயத்தோடு வீடு செல்ல கிளம்பினாள் வழியில் சித்தார்த் }
இதனை நாளாக தொந்தரவு தராத சித்தார்த் என்ன நடுவில் நிற்கிறானே என்று சிறு பயதோடு ராதிகா நடந்து சென்றால் ....
சித்தார்த் - ராதிகா உன் முடிவினை என்றுதான் கூறுவாய்...எனக்கு இன்றே பதில் கூறு என்றான் ...
ராதிகா - (அமைதியில் கீழே பார்த்தபடி விரைந்து சென்றுவிட்டாள் )
சித்தார்த் மிகுந்த வலியோடு தன் நண்பர்களிடம் ராதிகா என்னை பார்க்கவும் தயாராக இல்லையே நான் என்ன செய்தால் அவள் என்னை பார்ப்பாள் என்று உளற ...
நண்பர்கள் - மச்சான் முதல தங்கச்சி 12 ம் வகுப்பு தேர்வு முடிக்கட்டும் பிறகு பாத்துக்கலாம் ...இன்னும் 10 நாள் தான...
( தேர்வு முடிய காத்திருந்தனர் )
ராதிகாவும் இலையாவும் தேர்வினை முடித்தனர் ....பின்னர் வெளியே வராத பெண்களாய் இருவரும் மாறி மாறி வீட்டிற்குள் மகிழ்ச்சியில் விளையாடினர் ...
சித்தார்த்தும் கார்த்திக்கும் ராதிகாவையும் இலையாவையும் காணாது வாட்டத்தில் தினமும் காத்திருந்தனர் வீதியிலே ...
ஒருநாள் இலையாவும் ராதிகாவும் வெளியே வந்தனர் ...அவர்களின் தேர்விற்கான முடிவு காண இணையதளம் செல்ல ...
இதனை அறிந்த சித்தார்த் கார்த்தியுடன் ....

தொடரும் நடந்ததை நாளை காண்போம்....

எழுதியவர் : ச.அருள் (5-May-17, 9:49 pm)
சேர்த்தது : சஅருள்ராணி
பார்வை : 453

மேலே