தலைமையும் தர்க்கமும்
அகமும் புறமும் அறமது அறியிலா
அற்றோர் ஆண்டதோர் நெடியிலா
சுற்றம் சூழ்நிலை நினைந்திடா
களவு கைகொணர் காணொளி நித்திரையிலா
மானமது வெண்சாமற துயிலாற்றிட
மனமது பஞ்சனை தனை நினைந்திட
அறப்போர்தனின் ஆழ்மை உணர்ந்திலா
அடி பற்றியதோர் வாழ்வுடைமை என்சொல்லிலா
தவவாழ்வு தனைஏற்றும்!!!
கனம் சிந்தையின்றி சூதுதன்
சிறமேற்றிட கவிழ்ந்ததுன் மகுடம்
பிறபித்தோனும் பாராண்டபின் மண்ணுள்ளே!
உனை சிறப்பிதோளும் தண்ணுளே!
பிடிநிலமும் கவள்சோறும் உனதல்ல!
பீடுநடையும் பூமாலையும் நிலையல்ல!
ஆறடியும் முடிவில் பிடிசாம்பல்!!!