ஒருபக்க காதல்கதை பாகம்-25

அவளிடம் அவன் பேச வேறில்லை தெரிந்துகொள்ளவே நிறைய இருப்பதால் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக கோவமானது , அதன் வெளிப்பாடாய்
அவளைக்காண அங்கு சென்றான் :


அவள்: என்ன சார் வேலை இருக்குன்னு சொன்னீங்க ..இங்கதானா?


அவன்: உன்கிட்ட நான் ரொம்ப மரியாதையோட நடந்துக்கிட்டேன்..உங்கிட்டேந்தும் கொஞ்சமாவது எதிர்பாக்கிறேன்

அவள்: உன்எதிர்பார்புகள நான் ஏன் பூர்த்திசெய்யணும் ?


அவன்: உன்கிட்ட ரொம்ப பொறுமையா பேச பேச இன்னும் என்ன சோதிச்சிட்டே இருக்க, எவ்ளோ நாள் இப்டி?


அவள்: நீ இப்புடி பேசுனதையே எவ்ளோ நாள் பேசுவ ?


அவன்: இப்போ எனக்கு பதில் வேணும் அவ்ளோ தான்


அவள்: தெளிவா சொல்றேன் உன் மேல நீ நெனைக்குற எண்ணம் எனக்கு துளி கூட வரல ...


அவன்:ஏன்?

அவள்: ஒத்துவராது நா விட்டுடேன்

அவன்: உனக்காக என்னோட நேரத்தை செலவழிச்சுருக்கேன் எனக்கு தெரிஞ்சு ஆகணும்..என்ன எதிர் பாக்குற ?


அவள்: எந்த எதிர்பார்ப்பும் இல்ல ..


அவன்: ஏன் ?

(வண்டியில் இருந்து எடுத்து, அவன் கையில் சில மெடிக்கல் கோப்புகளை கொடுத்து)

அவள்: டாக்டர்ஸ் நெறய பேர பாத்துட்டு இருக்கேன் Hysterectomy பண்றதுக்கு ..புரியுற மாதிரி சொல்லணும் நா..நான் ஆம்பளையா மாறப்போறேன்

(எனக்கூறி சிறு புன்னகை தவழ்ந்து எப்பொழுதும் போல் சென்றான்(றாள்)

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (7-May-17, 10:58 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 405

மேலே