விட்டை அடகு வைத்து
படிக்க வைத்த
தந்தையின்
வலியை உணர்கிறேன்
நம்மை வாழவைப்பான்
என்றெண்ணிய தாயின்
ஆசை நிராசையானதில் - அவளின்
மனக்கவலையை அறிவேன்
அண்ணன் வழிகாட்டுவான்
என்றெண்ணிய தம்பியின்
கணக்கு, தப்புகணக்காக போனதின்
கவலை அவனைவிட
எனக்கே அதிகம்
உங்களை உலகத்தின்
உச்சிக்கு கொண்டுசெல்ல
படிப்பை முடித்து
கல்லூரியை விட்டு வெளிவந்த
இந்த ஐந்தாண்டுகாலமும்
அந்த படிப்பு எனக்கு
உதவாமல் போனதின்
வலியை யார் அறிவார்?
என்னை தவிர............