அன்னையின் வேண்டுதல்

கூற்றுவனே!!
கூட்டிச் செல்ல நேரம் வரவில்லையா;
அன்பு மகனை போல் உனக்கும் நேரமில்லையா........

விரைவில் வந்தால்,
தவ புதல்வனை தோழிகள் காண்பார்,
தங்க மகனை சிறுவயதில் விட்டு சென்ற கணவனை நான் காண்பேன்,

வரும் போது வருங்காலத்தை வாழ்த்தி விட்டு வா,
மருமகளை மாங்கல்யம் நிலைத்திட வரம் தந்து விட்டு வா,
சாதுவான என் மகனை கூடா சகாக்களுடன் சேரா என்று சாபமிட்டு வா............

எழுதியவர் : செ.நா (12-May-17, 11:18 am)
சேர்த்தது : செநா
Tanglish : annaiyin venduthal
பார்வை : 316

மேலே