முடிவில்லா காதல் தித்திப்பு - 2
பக்க எண்:- 2
வீட்டிற்குள் நுழைந்த இராமர் சந்தோஷமாக காணப்பட்டார்.
" தாயில்லா தனது மகள் ப்ரியாவை நற்பண்போடு வளர்த்து எப்படி கரையேற்றப் போகிறோமோ? ", என்று அவர் கொண்டிருந்த கவலை இப்போது காணாமல் போயிருந்தது...
நிம்மதியாக நற்காலியில் அமர்ந்திருந்தவரை, " சாப்பிட வாங்கப்பா. ", என்று அழைத்தவாறு வந்தாள் ப்ரியா...
கைகளைக் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தார் ராமர்.
சாதத்தை பரிமாற வந்த ப்ரியாவிடம், " இன்று ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மா. நிறைய சாப்பிட போறேன். ", என்றார் இராமர்...
அதைக் கேட்ட ப்ரியாவும் புன்னகை சிந்த சாதத்தைப் பரிமாறினாள்...
சாப்பிடத் தொடங்கிய இராமர், ப்ரியாவிடம், " இன்று உன்னை பூங்காவில் பார்த்தேன். ", என்று கூறினார்.
அதைக் கேட்ட ப்ரியா சற்று பயந்துவிட்டாள்...
இருப்பினும் தந்தையிடம் தான் ஒருவரைக் காதலிப்பதைச் சொல்லிவிடலாமென நினைத்தாள்..
அதற்காக தன் தந்தை சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக இருந்தாள்...
(தொடரும்....)