ஒரே ஒருமுறை

ஆரவாரமற்ற
சவ ஊர்வலத்தைப் போன்று
அது நகர்ந்து கொண்டே இருக்கிறது
எதைப் பற்றிய உணர்வுமின்றி
மரணம் தொடப் போகும்
அந்த ஒரு கணத்தை
எண்ணாமலில்லை
மர்மம் சூழ்ந்த
அந்த இரவுக்கு
அவஸ்தை மிகுந்திருக்கும்
சொற்கள் வழியின்றி
வேரறுத்து
மௌனத்தில் புதைந்து புணர்ந்ததில்
நிச்சயம் காதல் இல்லை
யாரும் யார் இல்லை
இனியொரு பிறவியும்
காணாத நிலையுண்டெனில்
அவள் கைகள் துவளாது
போகக் கடவ..


-கார்த்திகா அ

எழுதியவர் : கார்த்திகா அ (13-May-17, 11:25 am)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : ore orumurai
பார்வை : 151

மேலே