அன்னையர் தின நல் வாழ்த்து

இன்று அன்னையர் தினம்

அன்பெனும்
தாய்மொழியை
அகிலத்துக்கு
கற்றுக்கொடுத்த
அற்புதக்கடவுள் நீ...

கரு சுமந்தாய்
உரு கொடுத்தாய
உயிர் கொடுத்தாய்
உதிரம் கொடுத்தாய்
புதுப்பூவாய்
பூமியில்
மலரச்செய்தாய்
உயிர்ப்பித்த
உன்னதமே
பத்து மாத படைப்பு கடவுள் நீ

பாலூட்டினாய்
சீராட்டினாய்
பகலிரவாய் தோள்சுமந்தாய்
உறக்கம் தொலைத்தாய்
தன் பசி தன் வலி தன் நோய்
காணாது
குழந்தையோடு
குலம் காத்தாய்
காக்கும் கடவுள் நீ

தோலுயரம்
வளர்ந்தபின்னும்
தந்தையாகி தாயாகி
தன் மகவை கண்டபின்னும்
தாய்க்கு என்றும்
தன் மகனோ
குழந்தைதான்...
மரணம் வரை
மனதில் சுமக்கும்
தெய்வமே
அன்னையே
உனை வணங்குகிறேன்.

அன்னையர் தின
நல் வாழ்த்துக்கள்.

நிலாரவி.

எழுதியவர் : நிலாரவி (14-May-17, 9:35 am)
பார்வை : 451

மேலே