அம்மா
காற்றில் சுவாசகாற்றாகவும்
மண்ணில் விளைநிலமாகவும்
ஆகாயத்தில் வளியாகவும்
நீரில் மழையாகவும்
தீயில் கருவறை வெப்பமாகவும்
மனித குலத்தை காக்கும்
பஞ்சபூதங்களாக அம்மா...
உலகத்தில் உள்ள அனைத்து
புதுமைக்கும் புதுமையானவள்
உலகத்தில் உள்ள அனைத்து
பழமைக்கும் பழமையானவள்
தாய் மனிதகுலத்தின் மூலம்...
என் தாயின் பாதங்களுக்கு
என் ஆயிரம் அன்பு முத்தங்கள்...
வாழ்க தாய்குலம்...