அன்னை

உயிர்வலி கொண்டாலும் உலகம் காண உயிர் தருவாள்;;
உயர் என்றும் உன்னதம் என்றும் உயர்த்தி பார்ப்பாள்;;
ஊண் மறந்து உறக்கம் மறந்து ஊட்டி வளர்ப்பாள்,,,,,
_
அறம் சொல்லி தரம் உயர்த்துவாள்;;
அன்பு கொண்டு நெறிப்படுத்துவாள்;;
ஆசை அறுத்து ஆயுள் கூட்டுவாள்,,
_
தரம் உயர்த்தும் தாரம் தேடுவாள் ;;
தூரம் விலகினாலும் வாழ்க என வரம் கொடுப்பாள்;;
சிரம் போகும் வரையிலும் கரம் தருவாள்..........

எழுதியவர் : வாசு செ.நா (14-May-17, 1:03 pm)
சேர்த்தது : செநா
Tanglish : annai
பார்வை : 442

மேலே