அன்னை

அன்னை அவளுக்கு நிகர் இல்லை
அன்னை அவள் அன்பிற்கு எல்லை இல்லை
அன்னை உன்னையும் என்னையும் ஈன்றவள்
அன்னை இந்த உலகைத் தந்தவள்
ஆதவன் ஒளி அன்னை உயிர் !

பாலுடன் பண்பையும் புகட்டியவள்
நிலாச் சோறுடன் பாசத்தையும் ஊட்டியவள்
தன் பசி மறந்து உன் பசி தீர்த்தவள்
பணிந்து எழும் போது அள்ளி அனைத்து உச்சி முகர்ந்தவள்
மெச்சி உன்னை ஊரார் புகழும் போது ஆனந்தக் கண்ணீர் வடித்தவள் !

தாய் அன்பின் ஆலயம் பாசத்தின் தாய் வீடு
பண்பின் கலைக் கோட்டம்
உணர்வுகளை மீட்டும் வீணையின் நாதம்
பாச ராகத்தின் முடிவில்லா ராக ஆலாபனை அன்னை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-May-17, 10:01 pm)
Tanglish : annai
பார்வை : 451

மேலே