மரணத்தின் விளிம்பில்

மரணத்தின்
விளிம்பில்
வந்து வந்து
வெந்துபோகிற
வேதனையைத்தான்
இந்த
காதல்
தந்தும்
தராமலும்
போகிறது.....!!

இரவும்
பகலும்
ஒன்றானது......
இணையாத
விழிகளால்
நனைகிறது
நம்
கன்னங்கள்.....
சலனமின்றி
செத்துப்பிழைக்கும்
சன்மானம்தான்
நம்
காதலுக்குப்
பரிசு......!!

சூழ்நிலையை
சொல்லி.....
இந்த
சூழலில்
வாழ்வது.....சுலபமில்லை
சூனியமாய்
போன
மனிதநேயம்
அற்றவர்கள்
மத்தியில்.....!!

எங்கே
சிரித்தோம்
எங்கெல்லாம்
அழுதோம்......
என்பது
மட்டும்.....இரண்டும்
கலக்கும்போது
இருவருமே
நினைத்துக்கொள்ளுவோம்.....!!

காதல்
சாட்சியாக
காணுகிற
காட்சிகள்
யாவும்.....
நாளை
நாம்
வாழப்போகும்
வாழ்க்கையை
வரவேட்கும்
வெற்றி
மாலைகள்......!!

காதலியே
காலமெல்லாம்
நாம்
சுமந்த
வலி.....வெறுமனே
கண்ணீர்த்
துளிமட்டும்
அல்ல.....நம்
காதல்
வளர
உயிர் கொடுத்த
ஈரம் அது......!!

நாயகியே
உன்னை
எண்ணி
உருகாத
நாள்
இல்லை....
பேசாமல்
இருக்கும்போது
தான்.....
உன்னோடு
நிறைய
பேசுகிறேன்......
பதில்
தராத
உனது
மௌனம்......என்
உயிரை
அச்சுறுத்துதே......!!

சின்ன
விழிகளில்
உன்னைத்
சுமந்தேன்.....
உன்னோடு
தொலைந்த
நான்......
விண்ணோடு
விளையாடி
மண்ணோடு
சேர்ந்தேனே.....!!

ஏனடி
இந்த
தனிமை
வாழ்வு....?
வீணடி
இந்த
அழகிய
வாழ்க்கை.....
இளமையில்
தனிமை
கொடுமை.....
இதை
கொடுப்பது
யாரடி...???
காரணம்
தெரிந்தால்
கூறடி
கண்ணே......!!!!

நெஞ்சொடு
துயரம்
கொட்டிக்கிடக்குது
நீண்ட தூர
பிரிவு
வாட்டிவதைக்குது.....
என்னவளே
என்னவளே
என்னோடு
சேரும்
காலம்
கைகூடவில்லை
என்றால்
நிஜமாக
விண்ணோடு
நானும்
கலப்பேன்......உயிர்
மூச்சாகி
உன்னோடு
சேர்வேன்......!!!


அன்பே....😢😢😢❤️

எழுதியவர் : thampu (15-May-17, 4:24 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : maranthin vilimbil
பார்வை : 325

மேலே