நீ அழகி என்று உன்னை நீயே நம்பு
ஆயிரம் பேர் குழுமியிருந்த கூட்டத்தின் நடுவே
யாரோ சிலர் "அழகு " எங்கிருந்து தோன்றி
இருக்க கூடும் என்று வினவிக்கொண்டிருந்த போது !
அத்தனை பேரின் ஆட்காட்டி விரலும்
அதோ என்று உன்னைக்காட்டியதே !
அது போதாதா நீ "அழகி" என்று
உன்னை நீயே நம்பிக்கொள்ள !