உன் வாழ்க்கை போராட்டம்தான் என்றும் 555
தோழனே...
நடந்தால் பாதையில்
முட்களும் கற்களும்...
நிறுத்திவிடாதே முயற்சி
உன் பயணத்தை...
கைகளில் அகப்பட்ட பட்டாம்
பூச்சியும் பறந்துவிடும்...
போராடும் உன் முயற்சியை
விட்டுவிடாதே...
வாழும்வரை போராடு...
நீ மட்டும் போராட
பிறக்கவில்லை...
மண்ணில் பிறந்த உயிரினங்கள்
எல்லாம் போராடி வாழ்கிறது...
சிந்தனையை கூர்மையாக்கி
விரைந்து செய்லபடு...
வெற்றி உன்னை
தேடி வரும்...
உன்னை பார்த்து கைகொட்டி
சிரித்தவர்கள் எல்லாம்...
உன்னை கைகொட்டி
பாராட்டுவார்கள்...
உருவமில்லாமல் இருக்கும் பாறைக்கூட
செதுக்கினால் அழகிய சிற்பம்...
உன்னை நீயே செதுக்கிக்கொள்
நீயும் ஆவாய் சிற்பம்...
பிறர்க்கு வழிகாட்டியாக.....