அப்பாவின் பணம்

மகன் : "அப்பா நான் ஒரு கேள்வி கேட்கவா ?"

தந்தை : "கண்டிப்பாக.. என்ன கேளு..?"

மகன் : "1 மணி நேரத்திற்கு
நீங்க எவ்வளவு சம்பாதிப்பீங்க ?"

தந்தை : "அது உனக்கு தேவை இல்லாத விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?"

மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்...சொல்லுங்கப்பா ."

தந்தை : "ம்.ம்ம்... சராசரியா மணிக்கு 100 ரூபாய் சம்பாதிப்பேன் ..."

மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா அதுல 50 ருபாய் எனக்கு கொடுப்பாயா .?"

தந்தைக்கு கோபம் வந்தது ...

தந்தை : "நீ பணம் எதுக்கு கேக்குறனு தெரியும். ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு ...
நான் இங்க உங்களுக்காகதான் மாடுப்போல உழைக்குறேன்..."

அந்த சிறுவன் அமைதியா அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..

அந்த தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் ..
சற்று நேரம் சாந்தம் அடைந்து யோசித்தார்...மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று ..!!

ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே வேறு ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ..

தந்தை : "தூங்கிட்டியாடா ?"

மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..."

தந்தை : "நான் உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட 50 ரூபாய் .."
அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தான்.

மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "

அப்புறம் அந்த பணத்தை வாங்கி தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்ததை அவன் தந்தை கண்டதும் மறுபடியும் கோபமடைந்தார் ..

அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரிப்பார்தான் ... பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...

தந்தை : "உனக்கு எதுக்குடா இவ்வளவு பணம் .... அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குதியே அப்புறம் எதுக்கு என்னிடம் வேற பணம் கேட்டாய்...?"

மகன் : "ஏன்னா என்கிட்ட சேர்ந்த பணம் பத்தல்லே.. அதான் மீதி பணம் உன்னிடம் கேட்டேன்....

இந்தாங்கப்பா... இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு.! இதை நீங்களே வச்சிக்கோங்க உங்களோட ஒரு மணிநேரத்தை நான் வாங்கிக்கலாமா ?

"என்ன சொல்கிறாய் நீ.."?

அப்பா நீங்க நாளைக்கு ஒரு மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க ... நான் உங்ககூட இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ... "

அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ...
தன்மகனின் தலையில் கைகளை வைத்து வருடியபடியே மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டு வாரி அணைத்து கொண்டார்..!

வாழ்வில் பணம் வந்து போகும். நேரமும் முடிந்து போகும். உழைப்பதற்காக வாழாதீர்கள்.! வாழ்வதற்காக உழையுங்கள்.!

அனைவரிடமும் அன்பை காட்டுங்கள். முடியவில்லை எனில் உங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்கள் மீதாவது அன்பை அள்ளி வழங்குங்கள்.!

சிறுகதைதான் ஆனாலும் இன்று நாம் சிந்திக்க வேண்டிய கதை.!

எழுதியவர் : முகநூல் (16-May-17, 12:21 am)
சேர்த்தது : குமரிப்பையன்
Tanglish : maganin manasu
பார்வை : 542

மேலே