எனக்கு நீ வேண்டும்

வெய்யோன் ஓய்வெடுக்க நிலவவன்
கண்விழித்து சோம்பல் முறிக்கும்
அந்தி மாலை வேளை

வண்ண வண்ணப் பூக்கள்
வழிந்தோடும் நீரோடை
சில்லென்று காற்று வீச
சில்வண்டு நாதம் இசைக்க
மல்லிகை மணம் தூவ
மயில்கள் நடனம் ஆட
குயில்கள் கீதம் பாட
உன்னருகே நானிருந்து
மடி மீது தலை சாய்த்து
மகிழ்ந்திருந்தால் அது போதும்
எனை மறந்திருந்தால் அது போதும்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (16-May-17, 1:42 pm)
பார்வை : 693

மேலே