தேர்தல் கணைகள்
எவன் ஏசு..?
எவன் எமன்..?
என்று தெரியவில்லை
எல்லோரும்
எமை எருதாக பார்ப்பதால்...
ஓட்டு பெரும்வரை
ஓரினம்;
ஓட்டை பெற்றுவிட்டால்
ஓடும் இனம்...
ஒரு வாக்குக்கு
ஒரு காந்தித்தாளா..?
என்று ஆச்சிரியப்பட்டு போனான்.
அப்புறம் தான் தெரிந்தது
அவனையும் சேர்த்து
அனைத்ததையும்
அடமானமாக வைத்துவிட்டதை...
காந்தி வாங்கி தந்த
சுதந்திரத்தை
காந்திதாளுக்காக
சூதாடி விற்கிறான்
வாக்கு என்ற பெயரில்...
**************
சிகுவரா
மே 2004 ல் எழுதப்பட்டது.