மறைந்த காதலிக்கு காதலன் அஞ்சலி

சோலைக்குயில் பாட்டில் நீதான்
கோலமயில் ஆட்டத்தில் நீ தான்
வான் நிலவின் ஒளியில் நீதான்
வீசு தென்றல் மென்மையும் நீ தான்
பூத்து குலுங்கும் பூக்களும் நீ தான்
அவை தரும் வாசமும் நீ தான்
கனிகளில் மாங்கனியும் நீ தான்
சிற்றருவியும் நீ தான்
பாயும் நதியின் சீற்றமும் நீ தான்
மருளும் மானும் நீ தான்
இப்படி இயற்கையில் நான்
பார்க்கும் அத்தனையிலும் நீ
என்னருகே நீ இல்லை என்றாலும்
உன் அழகு என் மனதில்
கோயில் ஆனது அதில்
கோலம் செய் தெய்வம் நீ
என்னருமை காதலியே ஒருபோதும்
உனை மறவாது என் மனமே
என் ஜீவன் உள்ளவரை அதில்
என்னை இயக்கும் ஜீவன் நீ தான்
உன்னை நினைத்தே உன் நினைவில்
வாழ்கின்றேன் அறிந்திடுவாயே
அமைதி கொள்ளவாய் அமைதி கொள்வாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-May-17, 11:25 am)
பார்வை : 84

மேலே