என் காதல் பொய்யல்ல அவள் இதயம் முன்

அவளை ஓடி ஓடி காதலித்தேன்
என்னை விட்டு ஓடி விட்டால்
நான் வேண்டாம் என்று ,


துரத்தி துரத்தி காதலித்தேன்
அவள் இதயத்தில்
நான் துளியும் இல்லாமல் இருந்திருக்கிறேன்,


விழுந்து விழுந்து காதலித்தேன்
அவள் என்னை இப்படி விட்டுட்டு செல்வாள் என்று தெரியாமல்,


அவள் விழிகளை பார்த்து அழகாக இருக்கிறது என்றேன்
என் விழிகளுக்கு கண்ணீர் தந்துவிட்டாள்,


அவள் புன்னகை பிடித்திருக்கிறது என்றேன்
என்னை பித்தன் போல் பிதற்ற விட்டு விட்டாள்,


அவளோடு கனவை ரசிக்கிறேன் என்றேன்
கடைசியில் அவள் என்னை கல்லறைக்குள் கனவுக்கான சொல்லாமல் சொல்லி விட்டு போய்விட்டாள் என்னை பிரிந்து .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி . சு (18-May-17, 12:17 pm)
பார்வை : 721

மேலே