வெறி
காபி, வெள்ளை நிறத்தில் ஒரு நாய்
கருப்பு நாயை குறைத்துக்கொண்டிருந்தது,
நிறவெறி தாக்குதலோ என்று நினைத்தேன்,
காலில் பிளாஸ்டிக் பை முத்தமிட்டது,
கொஞ்ச தூரம் போய் நின்றது-
நாய்க்கு மறுபடியும் எப்போது நகரும் என்ற ஆவல்.
துரத்தி பிடிக்க எத்தனம்
ஒரே தாவலில் தெய்வத்தை தரிசிக்க சென்றது பை
சிறிது நேரம் கோயிலில் சுற்றிய நாய்,
மோட்சம் அடைந்த பையை,
ஆச்சரியத்துடன் ஆகாயத்தில் பார்த்தது,
எதையோ ஞாபக படுத்தி கொண்டது போல்,
வெளியேறும் வழியை தேடியது,
நடை சாத்தப்பட்டிருந்தது,
ஒரு ஆள் அளவிற்கு செல்லும் சிறு கதவின் வழியே
வீதியை பார்த்து முனகிக்கொண்டிருந்தது,
சப்தம் கேட்ட கருப்பு நாய்,
ஒரு வீட்டை பார்த்து எதற்காக
இவ்வளவு நேரம் குறைத்துக்கொண்டிருக்கும்....?