தொடுவதற்குள்ளாக தொலைதூரமானாய்

ஒரு குமிழியாய் நீ என்முன்
குதித்துக் கொண்டிருந்தாய்
ஒரு சிறுவனாய் நான் உன்னை
ரசித்துக் கொண்டிருந்தேன்
அடிக்கும் சிறு தென்றலுக்கெல்லாம் நீ
பறக்கத் துடித்துக்கொண்டிருந்தாய்
அடுத்து என்ன வருமோ என்றெண்ணவைத்து
அலைகழிக்க வைத்துக்கொண்டிருந்தாய்
உன்கூடப் பறக்க எனக்குமொறு சின்ன‌
சிறகு முளைத்தது
நானும் உனைத்தொட்டு பயணிக்க நினைக்கையில்
ஒருசிறு தூரல் பட்டுநீ தொலைதூரமானாய்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-May-17, 8:02 am)
பார்வை : 267

மேலே