பூக்களும் பாக்களும் பூவையும்

பூக்களும் பூவையும் ஒன்றுதான்
பூக்கள் பார்க்க அழகு
பூவை பார்த்தால் அழகு !

பாக்களும் பாவையும் ஒன்றுதான்
பாக்கள் படிக்கப் படிக்க அழகு
பாவை பார்க்கப் பார்க்க அழகு !

பெண்ணும் ஓவியமும் ஒன்றுதான்
பெண்ணை வரைந்தால் ஓவியம்
பெண் வரைந்தால் விழியோவியம் !

பொன்னும் பெண்ணும் ஒன்றுதான்
பொன்னில் செய்தால் பொன்நகை
பெண் புரிந்தால் புன்னகை !

நிலவும் பெண்ணும் ஒன்றுதான்
நிலவு சிரித்தால் வானுக்கு அழகு
பெண் சிரித்தால் பூமிக்கு அழகு !

நதியும் பெண்ணும் ஒன்றுதான்
நதி நடந்தால் அலை
பெண் நடந்தால் சிலை !

----கவின் சாரலன்

போனஸ் :
முதல்பூ சிரித்தால் பெண்
இரண்டாம் பூ சிரித்தாலும் பெண்தான்
மூன்றாம்பூ சிரித்தாலும் பெண்தான்
தோட்டமே சிரித்தால் ??? பெண் சோலைதான்

முதல்பூ சிரித்தால் முல்லை
இரண்டாம் பூ சிரித்தால் பெண்பிள்ளை
மூன்றாம்பூ சிரித்தால் அவள் பெண்பிள்ளை முல்லை பசுங் கிள்ளை !
தோட்டமே சிரித்தால் வியக்கும் "இவள் எந்தத் தமிழ்த் தாய் பெற்ற பிள்ளை ?"

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-May-17, 9:26 am)
பார்வை : 245

மேலே