சீரான வாழ்க்கை சிறப்பு தரும்

முள்செடிகள் நம்மை வந்து தாக்குவதில்லை
அவற்றைப் பாராமல் கால் வைக்க
காலில் முட்கள் தைத்துவிடும்
விடப் பாம்பும் கூட நம்மை வந்து தாக்குவதில்லை
தவறி நம் கால்கள் அதன் போக்கில் வந்திட
தீண்டிவிடும் நாகம் நம்மை
இயற்கையின் போக்கில் நாம் போக
இயற்கை நம்மை காத்து நிற்கும்
இயற்கையுடன் நாம் போர் புரிய எண்ணில்
இயற்க்கை நம்மை அழித்துவிடும்
தீயவை நல்லவை இவை இவை என்றறிந்து
வாழ்வை நாம் அனுசரித்தால்
வாழ்வில் இன்பங்கள் தாமே வந்தமையும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-May-17, 12:54 pm)
பார்வை : 148

மேலே