காதல் தீபம்

அன்பே...
உன் கொலுசுக்கு
சங்கீதம் கற்றுதந்தது யார்
விழிகளுக்கு மொழிபேச
சொல்லிக்கொடுத்தது யார்
கேசத்துக்கு வாசம்
அள்ளித்தெளித்தது யார்
புன்னகைக்கு வசீகர
ஈர்ப்புசக்தி அளித்தது யார்
உன் செவ்விதழ்களுக்கு
வண்ணப்பூச்சு செய்தது யார்
உன் குவளை விரல்களுக்கு
மென்மையை வைத்தது யார்
உன் மேனியில் எங்கு
பார்த்தாலும்
எப்படி பார்த்தாலும்
அழகோ அழகு
என்னிடம் தான்
வரிகள் இல்லை
இந்த அழகை வர்ணிக்க...

எழுதியவர் : செல்வமுத்து.M (20-May-17, 10:35 am)
Tanglish : kaadhal theebam
பார்வை : 119

மேலே