மரத்துப் போன மனிதம்

ஏழு மணிக்கு எழு !
எட்டு மணிக்கு உண் !
ஒன்பது மணிக்கு ஓடு !

பகல் முழுதும் பணம் தேடு !
இரவில் திரும்பு !

தொடு திரைகளிலும் தொலைக் காட்சிகளிலும்
தொலைந்து போ !

உண்டு
உறங்கி
விழித்து

மீண்டும்
மீண்டும் ஓடு !

சுயநலத்தில் சுருங்கிப் போ !
சக மனிதனை மற!
அவலங்களை கண்டு அன்னியமாகு!

இப்படி இயந்திரமாய் இயங்குகிற வாழ்க்கையில்...
இடையிடையில்
குற்ற உணர்வுகளுடன்
அவ்வப்போது விழித்து கொள்கிறது
மனதுக்குள்
மரத்துப் போன "மனிதம்" !

எழுதியவர் : நிலாரவி. (20-May-17, 1:16 pm)
பார்வை : 249

மேலே