பெண்மையின் வாழ்க்கை - சகி
பெண்ணென்பவள்
சிலரின் விழிகளுக்கு
ரசிக்கும் ஒரு பொருள் ....
அவளின் மனதை
புரிந்துக்கொள்வதைவிட
அழகை ரசிக்கவே பலருண்டு ....
ஒவ்வொருப்பெண்ணின்
மனதிலும் யாருமே அறியாத
வலிகளுண்டு.....
பிறப்பு முதல்
இறப்புவரையிலான வாழ்க்கை
எங்களுக்கு சொந்தமில்லை ....
எங்களை சார்ந்த
உறவுகளுக்கே சொந்தமாகிறது......
பெண்ணென்பவள்
அனைத்துமாய் அனைவரிடமும்
திகழ்கிறாள் .....
புரிந்துக்கொண்டவர்களை விட
பிரிந்தவர்களே அதிகம் .....
தூற்றியவர்களே அதிகம் ....
வலிகளுடனே வாழ்கிறோம்
எங்களின் இல்வாழ்க்கை
பயணத்தை.......