தாயுள்ளம்
தாயுள்ளம்
காணமுடியாத இருட்டறையில்
காற்றும் புகாமல் கண்மணியை
காத்து வைத்து உயிர் கொடுத்து
காற்றை சுவாசமாக்கி நான் சுவாசிக்க
காவலிருந்து என்னை ஈன்றெடுத்து
தன்னை உருக்கி என்னை வளர்த்து
வாழும் ஓவ்வொருநாளையும் எனதாக்கி
தன்வேர்வையை கொடுத்து என்னை உயர்த்தி
நான் உயர தான் உயர்ந்ததாகப் பாவித்து
தனக்கென்று ஒன்றையும் வைக்காமல்
எனக்காக தன்னை அர்ப்பணித்த
தன்னலமற்ற உள்ளம் இது ஒன்றுதான்.
உடலாலும் உள்ளதாலும் நினைத்து
போற்றிடும் ஒரே உள்ளம் தாயுள்ளமே