ரோஜாக்கள் தோட்டம் போடுது

கொலுசுச் சத்தம் சந்தம் பாடுது
குவிந்த இதழ்கள் மௌனம் பேசுது
கலைந்த கூந்தலில் தென்றல் ஆடுது
கவிந்த விழிகளில் அந்தி கவிதை எழுதுது
பாதம் பதித்து நீ நடந்த பாதையில்
ரோஜாக்கள் தோட்டம் போடுது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-May-17, 4:37 pm)
பார்வை : 124

மேலே