மனதில் ஊனம் இல்லை

கையைப் பறித்துக் கொண்டான்
என்ன நினைத்தோ கடவுள்
காலில் திறமை வைத்தான்
நிவர்த்தி செய்வதற்கோ கடவுள்

ஊனம் உடலே என்று
வருந்தி தூங்க வில்லை
தூரிகை எடுத்தாள் சிறுமி
வரைந்தாள் வான வில்லை

வரைந்த மரங்கள் வந்து
தலையை ஆட்டும் இன்று
உலவும் தென்றல் கூட‌
உதவி செய்யும் வந்து

மனதில் ஊனம் இல்லை
மலரைப் போன்ற பெண்ணாள்
தினமும் இருப்பாள் சிரித்து
நாமும் தருவோம் வாழ்த்து

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-May-17, 7:41 pm)
பார்வை : 160

மேலே