காதல்

நீ நான் நிலா
போக‌லாமா கவிதை உலா

உன்னைப் பார்க்காதவரை எனக்கு வெயில்
பார்த்த பின்னாலே எப்போதுமே குளிர்

நீ பேசும் பேச்சிலெல்லாம் காதல்
நீ பேசிக்கொண்டிருக்கும் போது
என் கண்ணுக்கும் இமைக்கும் இல்லை மோதல்

ஆவென வாய் திறந்தே உன் அழகை ரசிப்பேன்
போவென செய்கை செய்தே என் அருகில் வருவாய்

உன் மிரட்டல் கொள்ளை அழகு
விழி எனக்கு காட்டும் பல கவிதை மொழி

இதழ்கள் ஆடும் நாட்டியம் பரமானந்தம்
பிரிவே இல்லாததே நமது பந்தம்

நீ சிரிக்கும் அழகின் முன்
உவமையாக எதைச் சொல்ல‌
மொழியில் வார்த்தைகள் இல்லை அதைச் சொல்ல‌

காதலிக்காதவரை நான் தனியாய் இருந்தேன்
உன்னில் விழுந்த பின்னாலே
எப்போதும் துணையாய் இருக்கிறது காதல்
அடிக்கடி நலம் விசாரிக்கிறது கவிதை

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-May-17, 7:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 133

மேலே