காதல் வலி

தண்ணீரில்
அழும் மீனுக்கும்
தரையில்
அழும் மீனுக்கும்
வேற்றுமை உண்டு
நான் தரையில் அழும்
மீனானேன் உன் பிரிவால்...

புயலுக்கும்
காதலுக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
புயல் வந்தால்
உடமைகளுக்கு சேதம்
காதல் வந்தால்
உணர்வுகளுக்கு சேதம்...

உறக்கமில்லாத
இரவுகளில்
சற்றே உறக்கம்
வந்தாலும்
இரக்கமில்லாமல்
உன் நினைவுகள்
பறந்து வந்து
என்னை விழிக்க செய்கிறது...

எழுதியவர் : செல்வமுத்து.M (22-May-17, 10:43 am)
Tanglish : kaadhal vali
பார்வை : 187

மேலே