பதமாய் உன் சுவாசம் பட்டபிறகு ,,,,,,,,,,,,,,
எழுதி முடிக்கா கவிதையும்
ஏனோ இனிக்குது உந்தன் பெயரால்
நிலவின் கரை மட்டும் கண்ணில் படுது
முழுதாய் உன் முகம் பார்த்த பிறகு
இதமான காற்றும் ஏனோ இன்று இனிக்கவில்லை
பதமாய் உன் சுவாசம் பட்டபிறகு ,,,,,,,,,,,,,,
சொல்லி சொல்லி திணறுகிறேன்
என் சொல் எல்லாம் திருடியவன் நீ என்று
அள்ளி அள்ளி தெளிக்கிறேன் பார்வையை
என் ஆசை நாயகன் நீ மட்டும் தான் என்று
கொஞ்சம் கொஞ்சமேனும் விட்டுவை
உறுதியாய் ஒத்துக்கொள்கிறேன்
இது ஒரு தலை காதல் என்று ........