கயல் விழி

கண்மை போடும் கயல்விழியே!
உன் கார்கூந்தல் மணமறியாச் சிறுவனடீ நான்!
உன் கூந்தல் மணமறிய மறுப்பாயோ?
இல்லை, என் விரல் கோதி, இதழ் நுகரத்தான் தடுப்பாயோ?
உன் இடைக் கூட வெட்கி நானுதடீ!
என்னைக் கண்ட இன்பத்தால் செய்வதறியாது ஏங்குதடீ!
என் விரல்பட அது சிந்து பாடுதடீ!
காதல் வினையெல்லாம் அது செய்துத் துடிக்குதடீ!
இதழ்நீர் சுவையின்பம் கொடுத்துவிடு, உன் இடையிலே என்னை அள்ளிச் சேர்த்துவிடு..

எழுதியவர் : தமிழன் தெட்ச் (22-May-17, 8:20 pm)
சேர்த்தது : தமிழன் தெட்ச்
Tanglish : kayal vayili
பார்வை : 146

மேலே