பார்வை ஒன்றே போதுமே , அன்பே

அன்பே உந்தன் பார்வையின்
தன்மை நானறிவேன் -அது
என் மனதை சூறையாடவந்த
மூர்க்கன் பார்வை அல்ல -அது
என்னை ஆளவந்த என் அழகு
கோவலன் பார்வை என் மனதை
கொள்ளைகொள்ள வந்த
என் ராமனின் பார்வை -உத்தம பார்வை
அன்பு பார்வை ,என்னை ஆளவந்த
உந்தன் காதல் பார்வை நான்
விரும்பும் காதல் பார்வை .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-May-17, 2:38 pm)
பார்வை : 299

மேலே