அரசியல்வாதி

காந்தீயம் தேவையில்லை
காந்தித்தாள்கள் போதும்...

மனசாட்சி தேவையில்லை
அரசாட்சி போதும்...

கொள்கைபிடிப்புத் தேவையில்லை
குரங்கு குணம் போதும்..

அரவணைப்பு தேவையில்லை
அராஜகம் போதும்...

கொடுத்தவாக்கை காப்பாற்றத் தேவையில்லை
கொடுவாளை எடுத்தால் போதும்...

ஜனநாயகம் பற்றி பேசத்தேவையில்லை
ஜால்ரா போடத் தெரிந்தால் போதும்...

ராஜதந்திரம் தேவையில்லை
குள்ளநரி குணம் போதும்...

நாமும் நாட்டை ஆளலாம்...
நஞ்சை நன்மக்களுக்கும்...
நாளும் கொடுத்து விட்டு...
நல்லறிஞர் என்ற பெயரோடு...
நல்வாழ்க்கை வாழலாம்...
நாடும் நமக்குச் சொந்தம்...
நரிகுணமும் நமக்குச் சொந்தம்...
நாதியில்லா மக்களின்
நம்பிக்கையும் நமக்கே சொந்தம்...
நால்திசையில்..
நால்குடி மக்களும்..
நாள்தோறும்..
நாய் சண்டைபோட்டு..
நாமம் சாத்தும்வரை..
நமக்கே நன்மை...
நாடும் நமக்கே..
நானும் அரசியல்வாதியானால்..?

**************
சிகுவரா
மே 2004

எழுதியவர் : சிகுவரா (23-May-17, 3:59 pm)
Tanglish : arasiyalvaathi
பார்வை : 584

மேலே