ஓய்ந்திருக்கலாகாது

சூரியன் விழிக்கும்முன்னே
நீ விழித்திடு
குளிர் பனி மழை என்று பார்க்காதே
கடிகார ஓட்டத்துக்கு முன்பே
உன் பயணத்தை ஓடவிடு...

வெற்றியை பறிக்க திட்டம் தீட்டு
அறிவார்ந்த உழைப்பை வெளிப்படுத்து
உன்னை நீ நம்பு
தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்
அதீத நம்பிக்கை வைத்துவிடாதே...

கட்டியணைத்து முத்தமிட்டால்
நம்பி விடாதே முத்தத்துக்கு
பின்னாலும் ஒரு
துரோகம் இருந்ததை மறந்து விடாதே...

சான்றோர்களின்
வாழ்க்கை வரலாற்றை புரட்டிப்பார்
தோல்வியை கண்டு துவண்டு விடாதே
வெற்றிமேல் வெற்றிவந்தாலும்
மயங்கிவிடாதே...

காற்றுக்கும் காதுகள் உண்டு
யாரை நம்பியும் ரகசியம் பேசாதே
சேமிக்க கற்றுக்கொள்
முதுமைக்கான தேவையை
இன்றிலிருந்தே சேமி...

அளந்து பேசு
எதையும் பிளந்து பேசு
தக்க சமயத்தில் முடிவெடு
யூகத்தின் அடிப்படையில்
முடிவுசெய்யாதே
பயம்கொள்ளாதே
குருட்டு தைரியம் வைக்காதே...

எழுதியவர் : செல்வமுத்து.M (23-May-17, 6:52 pm)
பார்வை : 93

மேலே