கவலை

ஆயிரம் கவலை தினம் பிறக்கும்,,
அதில் நாளை மதி மயக்கும்,,
எதிர்காலம் பற்றி எண்ணத்துடிக்கும்,,
எண்ணுவதற்குள் இன்று முடிந்துருக்கும்,,
-
அன்னை தந்த து தீரும் வரைக்கும்,,
தினம் மனம் எண்ண நினைக்கும்,,
கனவு யாவும் கரைந்திருக்கும்,,
கைப்பிடித்திடும் ஆசை அதில் கலந்திருக்கும்,,
-
உறக்கம் இரவில் குறைந்திருக்கும்,,
உதடு சிறிது கருத்துருக்கும்,,
உள்ளே மாசு படர்ந்திருக்கும்,,
உடல் நடிக்க பழகிருக்கும்,,
-
ஊக்கம் மனதில் இறந்திருக்கும்,,
ஊனம் மனதில் பிறந்திருக்கும்,,
ஊர்வலம் போக நேரம் நெருங்கிருக்கும்.......................................................

எழுதியவர் : வாசு செ.நா (23-May-17, 8:23 pm)
சேர்த்தது : செநா
Tanglish : kavalai
பார்வை : 756

மேலே