பரீட்சை மதிப்பெண்
நானும் அப்பாவும், என் SSLC புக் வாங்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தோம்.
SSLC புக் என்பது பல பக்கங்களுடன் கெட்டியான காலிகோ அட்டையுடன் இருக்கும்.. அனைத்தும் கையால் எழுதப் பட்டிருக்கும். பிரதானமாக சிவப்பு மசியில். பள்ளியில் ஒன்பது, பத்து வகுப்பில் எடுத்த மார்க்கும் இருக்கும்.
பனகல் பார்க் தாண்டி, யூனிவர்சல் ஸ்டோர் கடந்து துரைசாமி சாலையில் வரும் வரை மௌனனமாக இருந்த அப்பா கேட்டார்...
"எப்படிடா நீ இவ்வளவு மார்க் வாங்கின?"
"தெரியலியேப்பா...!" என்றேன் நாயகன் கமல் போல்..
இரகசியமாக அப்பா மீசையை பெருமிதத்தில் தேவர்மகன் சிவாஜி போல் தடவிக் கொள்வதை ஓரக் கண்ணால் கவனிக்கத் தவறவில்லை.
அது ஒரு காலம். 75% மார்க்கும் மதிக்கப் பட்டது.
----முரளி