எழுத்தில் ஆரம்பித்து நிலாமுற்றம் வரை

'எழுத்து' என்னை ஊக்குவித்து
பழுத்து பக்குவப்படவைத்து
என்னுள் ஊறியிருந்த தமிழ்வித்தை
எண்ணக்கொடிகளாய் படரவைத்தது..

நினைவுகளில் நன்றியுடன் மீண்டுவந்து
நிலாமுற்றம் அளித்த சான்றிதழை
எழுத்தின் உறுப்பினராய்
எளியோனாய் பகிர்கிறேன்!
//
நரை என தொடங்கி நாலுவரி கவிதைகள் - நிலாமுற்றப் போட்டி விதி.
எனது இரண்டு கவிதைகள் இதோ..

1.
நிறைமாந்தர்தம் நரை

நரை - வழுக்கை தேடிய பிறைகள்!
நிறையும் வாழ்வு அளிக்கும் பொறைகள்!
அவை - அவலமாகும் வாழ்வின் பரிசுகளாம்
அலட்சியங்களை சுமந்து உதிரும் தீரர்கள்!
_____

2.
இவையும் இணையும்

நரை திரை வழுக்கை
நடுக்கம் சுருக்கம் தனிமை
முது-கூனல் தள்ளாமை அச்சங்கள்
மிதமிஞ்சின இணையை இழந்தபோது!

நன்றி தளத்து பொறுப்பாளர்களே, தமிழ்கூறும் நல்லுக நண்பர்களே!

எழுதியவர் : சூர்யா (25-May-17, 9:06 pm)
பார்வை : 1587

மேலே