நட்பின் உச்சம்

கன்னியவள் கண்யாடை-என்
கர்வமான ஆழ் மனதை
களவாடி விட்டதனால்-என்
கரங்கலால் வரைகிறேன்.

கருவொண்டு இல்லாமல்-கவியால்
கவி சொல்ல இயலாது
கவியொண்டு வரைகிறேன்-செல்(ப்)பியை
கருவாக நான் வைத்து.

முழு மதி நான் கண்டேன்-உனை
முதல் முறை காணையில்
மதி கண்டு மயங்கினேன்-உன்னால்
மதி கெட்டு நான் ஒடிந்தேன்.

ஒத்தடி பார்வையில்-எனை
மொத்தமாய் கொன்றவளே
மொத்தமாய் கேட்கவில்லை-காதலை
நித்தமும் தந்துவிடு.

அறிவுரைக்கு அன்னையானவள்-நீ
பாசத்திற்கு பாரதமானவள்-நீ
அழகில் ரதிதேவியானவள்-நீ
அடக்கத்திற்கு அரிச்சுவடியானவள்-நீ

பெற்றவள் பின் கண்ட பென் என்பதால்
என்னமோ தொட்டு விட்ட உன் நினைவுகளை விட்டு விட முடியாதுள்ளது.

எழுதியவர் : Thanujan lee (25-May-17, 9:54 pm)
சேர்த்தது : தனுஜன்
Tanglish : natpin echam
பார்வை : 68

மேலே