தந்தை

#துடுப்பு #இல்லாத #படகு
**********************
உடுப்பு இல்லா பிறப்பு வளர்ந்த பின்
உடுப்பில்லாமல் போனேனோ!
பிறந்த பின் பிஞ்சான கை,கால்கள் வளர்ந்தபின் கைவீசி,கால் நடைப்பயணம் போகாமல் போனேனோ!
அறியவயதில் இருள் கண்டு பயந்த
நான் வளர்ந்தபின் இருளில் பயணிக்காமல் போனேனோ!
சவாலென என் மாணவப் பருவத்தில்
எல்லாம் தேர்வு கண்டு பயந்தோடினேனோ!
மணநாள் கண்டு துனைவியாரும்,தமயனும், திருமகளும் கண்ட பின் வாழ்வு சுமையென கருதினேனோ!
திருமகள் திருமணத்திற்கு சீர் வரிசை கண்டு பயந்து ஓடினேனோ!
தமையனின் வாழ்வாதாரத்திற்கு
அரைக்காணி நிலம் கூட மிச்சம் இன்றி கலங்கி நின்றேனோ!
வாழ்கை துணை என வந்தவள் பாதியிலே இழந்த பின் தடுமாறி நின்றேனோ!
தமையனும்,திருமகளும் நடுகடலில் துடுப்பில்லா படகு என எண்ணி முதியோர் இல்லத்தில் விட்ட பின்
கலங்கியா நிர்ப்பான் இந்த துடுப்பில்லா தகப்பன் ?

#மருதராஜன்
#துவரங்குறிச்சி

எழுதியவர் : மருது என்ற மருதராஜன் (26-May-17, 1:57 pm)
Tanglish : thanthai
பார்வை : 119

மேலே