முடிவுரை
கட்டியணைத்து..
காதல் மொழி பேசிட..
காதலன்...
தோல்விகளுக்கு..
தோள் கொடுத்து உதவிட..
தோழன்...
உள்ளங்கால் முதல்..
உள்ளம் வரை..
உரசிக்கொண்டு..
ஊர் சுற்றிட..
உற்ற தோழன்...
நாள் முழுவதும்..
நாயப்போல்..
நன்றியுடன் சுற்றிட..
நல்ல நண்பன்...
உறங்கிடும் நிமிடம் தவிர..
உறக்கத்தை தொலைத்த நிமிடத்திலும்..
உனை நினைத்து..
உருகி உருகி வழிந்திட..
உயிர்க் காதலன்...
அவள் பைசா செலவிடாமல்..
ஆசைப்பட்ட..
அனைத்தையும் வாங்கிதந்திட..
ஆருயிர் நண்பன்...
எத்தனை அவதாரங்கள்
எடுத்திட்டேன் காதலியே..!
என்னை படைத்து..
எனையாளும் பிரம்மனும் நீயோ..?
எமனும் நீயோ..?
கணவன் படைப்பிற்காக..
கண்களில்..
கனவுகளோடு காத்திருந்தேன்...
மூன்றாவது நபரால்..
மூன்று முடிச்சை வாங்கிகொண்டு..
மூச்சடைக்க செய்துவிட்டாய்..!
மூன்று வருட நட்புக்கு..
முடியா காதலுக்கு..
முடிவுரை எழுதிவிட்டாய்..!
முடிவுரை உனக்கு..
முகவுரை எனக்கு...
செத்திட்டது மனச்சாட்சி..
செத்திடாது அவன் சாட்சி..
தொடக்கவுரை கணக்கு..
தொய்வில்லை எனக்கு...
**************
சிகுவரா
ஆகஸ்டு 2௦௦4