கோடை மழை

ஊர் எல்லையம்மன் கோயிலில்
தாரைத் தப்பட்டை மேளம் முழங்க
இரவு முழுவதும் ஊர் மக்கள் குழுமி
மழை வேண்டி மனமுருகி பாடி வேண்ட
வைகறையில் வானம் மப்பும் மந்தாரமானது
கண் திறந்தாள் மாரியம்மன்
கொடிமின்னல் இடியோடு வானதிர
கொட்டியது கோடை மழை
மக்கள் மனம் குளிர
குளிர்ந்து நனைந்தது பூமி
படைத்தவன் உனைக் காப்பான் நம்பிடு
அவன் மேல் அயரா நம்பிக்கை வைத்திடு
அது நீ கேட்கும் நியாய கோரிக்கைக்கு
எல்லாம் நல்ல விடைதரும்
நலம் தரும் நன்மைகள் எல்லாம் தரும்

எழுதியவர் : வாசன்-தமிழ்பித்தன்-வாசுத (26-May-17, 4:53 pm)
Tanglish : kodai mazhai
பார்வை : 330

மேலே