இதய ஓசை கேட்கிறதா அன்பே

#இதய_ஓசை_கேட்கிறதா_அன்பே

இதய ஓசை கேட்கிறதா அன்பே
இதயத்தில் உதயமான இதயத்தாமரையே.....

இதழ் திறக்க மறுப்பதென்னக் கண்ணே
இதழ் திறந்து கூறடிப் பெண்ணே
என்னை விரும்புகிறாய் என்று
உன்னை எண்ணி வாடும் என்னிடம் .......

என்னிதயத்தில் வாழும் தேவதையே
உன்னிதயத்தில் வாழ எனக்கொரு இடம் தேவையே......

உன்னிதயம் எனக்குள் துடிக்கும் ஓசை
உனக்கு கேட்கவில்லையோ.....

உந்தன் மடி சாய்ந்து உறங்கும்
எந்தன் நொடி பொழுதில் மாயமாகிப் போவேனடி
மாயவளே உனக்கது புரியலையா.....

மதி மயக்கும் பேரழகியே என்
மதியைத் திருடிச் சென்றதேனடி....

காட்டாற்று வெள்ளமாய் உன் நினைவுகள்
மாசற்று என் நெஞ்சில் புதைந்து
உந்தன் பெயரையே அழைத்துத் துடிக்கின்றதடி....

சித்திரைப் பெண்ணே துடிக்கும் இதயத்தில்
நித்திரை கொள்ள வருவாயா...??

பிரியா

எழுதியவர் : (26-May-17, 8:00 pm)
சேர்த்தது : Priyanka kaverimannan
பார்வை : 212

மேலே