மறைசொல் உறைந்துகிடக்கிறது
கணக்குகளில் அடங்கா காரணங்களுக்காய் எப்போதெல்லாம் வெளியேறுகிறேனோ
பிணக்குகள் தொடங்கா பிரிவுகள் அப்போதெல்லாம் நமக்கு அவசியமாகின்றது...
ஒருமுறையேனும் புன்னகைத்து வாசல்வரை எனைநீயும் வழியனுப்ப மறுத்திட
சிறுநரைகொண்ட சிகைக்கற்றைகளும் எனை சினந்துகொள்கிறது...
நிலைக்கதவுகளினூடே முதன்முறையாய் நீ பார்த்திட்ட நீண்ட பார்வைதான்
நிலையின்றி இன்றுவரை என்னோடு நீந்துவதை காணமுடிகிறது...
இருள்சூழ விலகும் நிழல்போல நானும்
சுருள்வாளில் சுழழும் இதழ்போல நீயும்...