பத்திரமா பாத்துக்கணும்

பத்திரமா பாத்துக்கணும் 💍
*****************************

ஒரு முரட்டுத்தனமான ஒரு ஆள்...
அவன பார்த்தா அந்த ஊருல
எல்லோரும் பயப்படுவாங்க...

அதே ஊர்ல ஒல்லியா ஒரு ஆள்
அவன பார்த்தா எல்லோரும்
கேலியா பார்ப்பாங்க...

இந்த முரட்டுத்தனமான ஆள்
தெருவுல நடந்துபோன...
எல்லோரும் ஒதுங்கிப்போவாங்க,
பயந்த படி...!!!

அத காரணமா வச்சி
சின்ன சின்ன பஞ்சாயத்து பண்ணி
பிழைக்க ஆரம்பிச்சான்...

அவனுக்கு ஒருத்தன் மேல
கோபம் வந்தா... அவன் கண்ணா பார்த்து
“தொலைச்சிப்புடுவேன் தொலைச்சின்னு..”
சொல்லுவான்
அதுலேயே பாதிபேர் பயந்து ஓடிருவாங்க..!!

ஒருநாள்...
அந்த ஒல்லியா நோஞ்சான் மாதிரி இருக்குறவன்
எதையோ ரொம்ப நேரம்
குனிஞ்சி தேடிக்கிட்டே இருக்கான்....

இத அந்த முரடன்
ஆரம்பத்துல இருந்து பாத்துட்டே இருக்கான்..

முரடனுக்கு ஆர்வம் தாங்கமுடியல...
அப்படி அவன் எதைத்தான்
ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கான்னு...

நேரடியா அவன்கிட்டயே போய் கேட்டுட்டான்
“அப்படி எதைத்தான் ரொம்ப நேரமா தேடுறேன்னு..”

அதுக்கு அவன் சொல்றான்...
இல்ல.. கையில இருந்த மோதிரம்
ரொம்ப நாளா லூசா இருந்துச்சி...
இன்னைக்கு அது காணாம போச்சி...
அதான் தேடிக்கிட்டு இருக்கேன்னு....

உடனே முரடன் சொல்றான்...
அதுவே தம்மாத்துண்டு மோதிரம்
அத உன்னால பத்திரமா பார்த்துக்க முடியலையா..?

நா அத பத்திரமாத்தான் பார்த்துட்டு இருந்தேன்...
இன்னைக்கும் வழக்கம் போல
பத்திரமா பார்க்கலாம்னு கைய பார்க்கும் போதுதான்...
அது காணாம போயிருந்துச்சின்னான்
அந்த நோஞ்சான்....

இந்த பதிலா கேட்ட முரடனுக்கு
லைட்டா கோபம் வந்தது...
இருந்தாலும்...

அதான் லூசா இருக்குன்னு தெரியுதுல...
அப்ப அத பத்திரமா கலட்டி
வீட்டுல வைக்க வேண்டியதுதானா...?

இனிமே அத பத்திரமா பாத்துக்கனும்னுதான்
கலட்டி வீட்டுல வச்சிடலாம்னு
நினைச்சேன்... அத கலட்டுரதுக்காகத்தான்
கைய பார்த்தேன்...
அப்பத்தான் அது காணாம போச்சின்னே
எனக்கு தெரிய வந்துச்சின்னான்...

இந்த பதில கேட்ட முரடனுக்கு கோபம்
உச்சத்துக்கு போனாலும்... விடுறதா இல்ல...
திரும்ப திரும்ப கேள்வி கேட்டுட்டே இருக்கான்...
நோஞ்சான் அதுக்கு பதில் சொல்லிட்டே இருக்கான்...

ஒரு கட்டத்துல கடுப்பான முரடன்...
ஏன்டா சின்ன மோதிரத்தைய்யே உன்னால
பத்திரமா பாத்துக்க முடியல...
இறக்கப்பட்டு உன்கிட்ட பேசுனா...
நீ எடக்கு மடக்கா பதில் சொல்லுற...
முட்டாப்பயலாடா நீ...
இதுக்கப்புறம் எதுனா பேசுனா...
தொலைச்சிடுவேன் தொலைச்சின்னு...
சொல்லிட்டு முரடன் கோபமா கிளம்ப ஆரம்பிச்சிட்டான்...

உடனே அந்த நோஞ்சான் போறவனா கூப்டு சொல்றான்...
என்னையறியாம சின்ன மோதிரத்த தொலைச்சிட்டு...
அத தேடுற நா முட்டாள்னா....
உனக்கு முன்னாடி குத்துக்கல்லாட்டம்
நிக்கிற என்ன தொலைச்சிடுவேன்னு சொல்லுற
நீ என்ன அவ்வளவு பெரிய அறிவாளியா...????

இதுக்கப்புறம் முரடனால கேள்வி கேட்க முடியல...!!

மத்தவங்க பிரச்சினைல
தேவையில்லாம மூக்க நுழைக்கிறது கூட
தப்பில்ல...
ஆனா முழுசா நுழைச்சா
இதுதான் கதி...

இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (27-May-17, 11:03 am)
சேர்த்தது : க முரளி
பார்வை : 117

மேலே