மலர விரும்பாத மொட்டு உண்டோ

அறிவு படைத்தவனும்
அறிவதில்லை...
ஆணோ..? பெண்ணோ..?
அனைத்திற்கும்...
அவன் அணு தான்..
ஆண்டவன் என்பதனை...
அறிவியலும் அறியாத..
அறிவிலிகள்...

குடி முதல் புகை வரை..
குடித்துக்கொண்டும்..
குறை நோயுடன்..
குறைப்பட்டுக்கொள்வான்..
குழந்தையில்லை என்று...
குறையில்லா..
குடும்பவிளக்கை..
குதறி தின்றிடுவான்..
குருதி கொல்லும் வார்த்தைகளால்..!

மலர விரும்பாத மொட்டு உண்டோ..?
மலடி என்பதுடன் வாழ்வில் ஒட்டுவுண்டோ..?

கொங்கைபாலை
கொடுப்பதற்காக..
கொழுந்துவிட்டெரியும் ஆசை..
கொடுக்க இயலாதவனும்..
கொடுத்திடுவான்..
கொடுங்கோல் வார்த்தைகளில் பூசை..!

கண்ணீருக்கு..
மத்தியில் கனவு...
கட்டிலுக்கு..
மத்தியில் காணாமல்போனது...

விவாகரத்து வரும்முன்னே..
விரைந்திடுவான் – அடுத்த
விவாகத்துக்கு...
விஞ்ஞானத்தில்
விளக்கி சொன்னாலும்..
விளங்கிக் கொள்ளாத
விலங்குகள்...

****************
சிகுவரா
மார்ச் 2005

எழுதியவர் : சிகுவரா (27-May-17, 10:03 pm)
பார்வை : 547

மேலே