உள்ளழகை உணர்ந்தேன்

உள்ளழகை உணர்ந்தேன்
பட்டும் படாத வாழ்வில்..
யாரும் நடாத தாமரை
மொட்டையே தலைதாங்கும் அழகாய்...
விட்டுப் பிரியாத எனதுறவே..
மொட்டாய் மலராத உன்நெஞ்சில்
அன்பு மணம் அலைவீச..
துளித் தேன் கடலாய் உன்னுள் வாழும்
உள்ளழகை உணர்ந்தேன்
அடியேன் நானுந்தன் மகனல்லவா..
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (28-May-17, 11:01 am)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 74

மேலே