உன் நினைவால் வாடும் நெஞ்சம்
உன் ஞாபகங்களை
ஒரு வாறாய் மறந்து
நான் கண்ணயர
நினைக்கும் போது
உன்மல்லிகை வாசனையை
என் முகத்தில் அள்ளி வீசி
காற்றும் எனக்கு சதி செய்கிறதே
என்னைச் சீண்டிப் பார்ப்பதில்
காற்றுக்கும் ஓர் ஆனந்தம்
உன்னைப் போன்று
தூக்கம் தொலைத்த பொழுதுகள்
உன்னால் எனக்கு ஏக்கம் நிலைத்த இரவுகள்
என்று தீர்ப்பாய் என் தொல்லை
உன் நினைவால் வாடுது என் இதய முல்லை
ஆக்கம்
அஷ்ரப் அலி